கோமதிப்பாட்டியும் ஊமைச் சங்கரனும்...
அப்போதுதான், ஊமையும்,அவன் அம்மா
கோமதிப்பாட்டியும் எனக்கு பரிச்சயம் ஆனார்கள்.
ஊமையின் பெயரை யாரும் சொல்ல மாட்டார்கள்.
ஊமைய்யன் வரான் என்று சொல்வார்கள். வரும்போதே
சத்தமாக , கத்திக்கொண்டே வார்த்தைகளில்லாத சத்தத்துடன்
சத்தமாக , கத்திக்கொண்டே வார்த்தைகளில்லாத சத்தத்துடன்
கையைக்காலை ஆட்டிக்கொண்டு, ஒடி வருவான்.
ஊமை நல்ல சிவப்பாகவும் ஆறடிக்கு குறையாத உயரமாகவும் இருப்பான்.
நெற்றியில் விபூதி இட்டு வேட்டியை முழங்காலுக்கு மேல் தார்பாய்ச்சிக்
நெற்றியில் விபூதி இட்டு வேட்டியை முழங்காலுக்கு மேல் தார்பாய்ச்சிக்
கட்டிக்கொள்வான். அதன்மேல் இறுக்கமாக துண்டை பாட்டி கட்டி
விடுவாள்.அவனுக்கு ஐம்பது வயது இருக்கும். சற்று மனநிலை சரி இல்லாதவன்.
குழந்தைகளை ரொம்ப பிடிக்கும் . அவனைக்கண்டால் குழந்தைகள் பயப்படும் .
குழந்தைகளை ரொம்ப பிடிக்கும் . அவனைக்கண்டால் குழந்தைகள் பயப்படும் .
எல்லார் வீடுகளுக்கும் முக்கியமாக அக்ரஹாரத்து
மனிதர்கள் கிணற்று நீர்(உப்புத் தண்ணீர்),
குடிதண்ணீருக்கு, அவனைத்தான் நம்பி இருப்பார்கள்.
கிணறு எல்லா, வீடுகளிலும் வீட்டின் பின்னால் கடைக்கோடியில் இருக்கும்.
துலாகிணறு. ஒரே உப்புத்தண்ணீர். குறைந்தது 40, 50 அடி ஆழத்தில்
துலாகிணறு. ஒரே உப்புத்தண்ணீர். குறைந்தது 40, 50 அடி ஆழத்தில்
தண்ணீர். பாரத்திற்கு மூங்கில் கழியில் கல்லைக்கட்டி,கல்தூண் மேல்
தாங்க வைத்து, இரும்பு சங்கிலி , இரும்பு வாளியுடன் 40,50 அடிக்கு
துலாவை இறக்கி, தண்ணீர் இறைக்கணும்.
அதை அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடியில் உள்ள
அண்டா தொட்டிகளில் நிரப்பனும்.
அந்த துலாகல்லுடன் மூங்கில் கழியை,ஒரே அழுத்தில்,
கிணற்றுள்ளே அமுக்கி ரெண்டேஇழுப்பில் வாளியைதண்ணீருடன் இழுத்து
ரெண்டு கையிலும் பெரிய வாளிகளுடன் நடக்காமல் ஓடி ஓடி தண்ணீர்
நிரப்புவான். பத்து நிமிஷங்கூட ஆகாது அதற்கு. ஒரு தொட்டியோ
அண்டாவோ நிரப்ப நாலணாதான்.
சாத்தூரில், நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறம் சற்று தள்ளித்தான்
வைப்பாறு. படித்துறையில் சுமார் பத்து படிகள் உண்டு. அந்த ஆற்றில்
காட்டாற்றுவெள்ளம் அடிக்கடி வரும். ஆற்றின் நடுவில் எப்போதும்
சிறிது தண்ணீர்போய்க் கொண்டு இருக்கும். அந்த ஊர் ஜனங்கள்அழகாக
டிரஸ் பண்ணிக்கொண்டு ஆத்தங்கரையில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்து
காட்டாற்றுவெள்ளம் அடிக்கடி வரும். ஆற்றின் நடுவில் எப்போதும்
சிறிது தண்ணீர்போய்க் கொண்டு இருக்கும். அந்த ஊர் ஜனங்கள்அழகாக
டிரஸ் பண்ணிக்கொண்டு ஆத்தங்கரையில் கூட்டம் கூட்டமாய் உட்கார்ந்து
ஆற்று மணலில் 2 அல்லது 3 அடி குழி தோண்டி உறை போட்டு
குடம் குடமாக தண்ணீரை எடுத்துப்போவார்கள். குடம் வைக்க குழி,
உட்கார குழி , ஊற்றுக்கு குழி போட்டு, தண்ணீரை ஊத்துப்பட்டையால்
தண்ணீர் கலங்காமல் சேந்தி எடுக்கவேண்டும். இது நல்ல குடி நீர்.
ஊமை அங்கிருந்து ஒருநாளைக்கு ஐம்பது குடங்களாவது எடுப்பான்.
எல்லா வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்வான்.
ஒருகுடத்துக்கு நாலணா தருவார்கள்.
காசு பணம் பற்றி ஊமைக்கு தெரியாது.
அவனுக்கு ஏன் இந்த வேலைகளைச் செய்கிறோம் என்றே தெரியாது.
பாட்டிதான் அவனை எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கியிருந்தாள்.
அவன்தான் பாட்டிக்கு, சம்பாதித்து, பாட்டியும் அவனும் பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
பாட்டிக்கு சிவன் கோவில் தெருவில், சின்னதாக ஒரு வீடு இருந்தது.
அதில் கீழே மூணு ரூபாய் மாதவாடகை வரும்.
அவன்தான் பாட்டிக்கு, சம்பாதித்து, பாட்டியும் அவனும் பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
பாட்டிக்கு சிவன் கோவில் தெருவில், சின்னதாக ஒரு வீடு இருந்தது.
அதில் கீழே மூணு ரூபாய் மாதவாடகை வரும்.
பாட்டி மாடியில் குடி இருந்தாள். அந்த காலத்தில் நாங்கள் இருந்த
பெரிய வீட்டின் வாடகையே இருபத்தைந்துரூபாய் தான்.
ஊமை காலை பத்து மணி வாக்கில் பாட்டியுடன் தினமும் வருவான்.
அவனுக்கும் பாட்டிக்கும் தினமும் இட்லி, சாம்பாருடன் சாப்பிடத் தருவேன்.
ஏதோ கத்திக்கொண்டே சாப்பிட்ட உடன் என் காலில் விழுந்து
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வான். அப்படி பண்ணாதே என்றால் கேட்க மாட்டான்.
உனக்கு இன்னும் தண்ணி எடுக்கவா ? எண்ணை தேய்ச்சுக்கோ.
உனக்கு இன்னும் தண்ணி எடுக்கவா ? எண்ணை தேய்ச்சுக்கோ.
நிறைய தண்ணீர் எடுக்கறேன் என்று சைகையால் அபிநயம் பிடித்துக் காட்டுவான். போதும் அப்பா என்று சொல்லி அனுப்புவதற்குள் சிரமமாகி விடும்.
தினமும் இட்லி தோசைக்கு மாவு அரைத்துக்கொடுப்பான்.
பாட்டி மாவை தள்ளிக்கொடுப்பாள். என்னிடம் நைசாக அரைச்சிருக்கேன்.
இட்லி பூவா இருக்கும் என்று சைகை செய்து தானே பெரிதாக சந்தோஷப்பட்டுக்கொள்வான். இந்தக்கால கிரைண்டரை விட வேகமாகவும்
நன்றாகவும் சுத்தமாகவும் மாவு அரைத்துக்கொடுப்பான்.
அவனுக்கு தீபாவளிக்கு வேஷ்டி துண்டு வாங்கிக் கொடுத்தால்
வேஷ்டிக்கு முத்தம் குடுத்து, என் கணவர் ஆபீஸுக்கு போகுமுன் விழுந்து கும்பிடுவான்.
தெருவில் எல்லோரிடமும் என் கணவரையும் வேஷ்டியையும் காண்பித்து குதிப்பான்.
பார்க்கும் பொழுது எல்லாம் விழுந்து கும்பிடுவான்.
தெருவில் எல்லோரிடமும் என் கணவரையும் வேஷ்டியையும் காண்பித்து குதிப்பான்.
பார்க்கும் பொழுது எல்லாம் விழுந்து கும்பிடுவான்.
ரொம்ப கஷ்டமாக இருக்கும் பார்ப்பதற்கு.
நாங்கள் மதுரைக்கு மாற்றலாகி, வந்த 5 அல்லது 6 வருடங்களுக்கு பின்,
கோமதிப்பாட்டி எப்படியோ என்னைத்தேடி ,மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள் .
ஊமை எங்கே பாட்டி என்றதுமே, பாட்டி ரொம்பவும் அழுதுவிட்டார். ஊமை எனக்குத்தெரியாமல் திடீரென்று எங்கேயோ வழி தெரியாமல் போய் காணாமல் போய் விட்டான். நான் தேடாத இடமில்லை. அவனுடைய அண்ணன் ஒரு ஊரில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தான்.
கோமதிப்பாட்டி எப்படியோ என்னைத்தேடி ,மதுரையில் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டாள் .
ஊமை எங்கே பாட்டி என்றதுமே, பாட்டி ரொம்பவும் அழுதுவிட்டார். ஊமை எனக்குத்தெரியாமல் திடீரென்று எங்கேயோ வழி தெரியாமல் போய் காணாமல் போய் விட்டான். நான் தேடாத இடமில்லை. அவனுடைய அண்ணன் ஒரு ஊரில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தான்.
நீ மாற்றலாகி போனதும் ஊமைக்கும் வயதாகி விட்டது, எப்படியும்
பெரியவன் ஒரு வேளை சாப்பாடாவது போடுவான்,இரக்கப்படுவான் என்று போனேன்.
ஆனால் அண்ணன் ஊமையை சத்தம் போடுகிறான்,ஓடுகிறான்,
ஆனால் அண்ணன் ஊமையை சத்தம் போடுகிறான்,ஓடுகிறான்,
என்னால் அவனுக்கு சாப்பாடு போட்டு முடியவில்லை என்று அடிக்கடி ரூமுக்குள், உள்ளே வைத்து பூட்டியதாலும், இன்னும் சில இம்சைகளாலும் அவன் அடிக்கடி காணாமல் போவதும் வருவதுமாக இருந்தான். அப்படி ஒருமுறை போனவன் ஒரேயடியாக போய் விட்டான், என்றாள்.
பாட்டி சாத்தூரில் இருந்த பொழுது என்னிடம் தன் பெரிய பிள்ளையிருப்பதை சொன்னதே இல்லை. பாட்டியிடம் ஏன் என்னிடம் உங்கள் பெரிய பையனை பற்றி சொல்லவில்லை என்று கேட்க முடியவில்லை.
பாட்டி என்னிடம் நான் உனக்கு ஒத்தாசையாக எல்லாம் செய்துகொண்டு
உன்னோடவே இருக்கேன், என்னைப் போகச் சொல்லிவிடாதே என்றார்.
உன்னோடவே இருக்கேன், என்னைப் போகச் சொல்லிவிடாதே என்றார்.
மிகவும் அழுதார்கள். எனக்கு பாவமாக இருந்தாலும் என்னால் எதுவும் செய்ய
முடியாத நிலமை. பார்க்க பாவமாக இருந்தது.
முடியாத நிலமை. பார்க்க பாவமாக இருந்தது.
நல்ல வேளை வெளியிலிருந்து இவர் வந்தார். பாட்டியை பார்த்த உடனே புரிந்து விட்டது. பாட்டியை சமாதானப்படுத்தி எங்களால் ஓரளவுதான் உதவமுடியும் என்று சொல்லி
பாட்டி கையில் சிறிதளவு பணமும் இரண்டு நார்மடிபுடவையும் கொடுத்து
பாட்டியை அனுப்பி வைத்தோம்.
பாட்டி கையில் சிறிதளவு பணமும் இரண்டு நார்மடிபுடவையும் கொடுத்து
பாட்டியை அனுப்பி வைத்தோம்.
இப்படித்தான், வாழ்க்கையில் கையாலாகாத்தனத்தினால்
நிறைய உதவமுடியாமல் ஆகிறது. பாட்டி கண்ணிலிருந்து மறையும் வரை
பார்த்துக் கொண்டிருந்தேன். மனது கனத்தது.
பார்த்துக் கொண்டிருந்தேன். மனது கனத்தது.
மறக்க முடியாத அந்த ஊமையையும் பாட்டியையும் நினைத்து
என் மனம், ஆறாமல், அழுது கொண்டுதான் இருக்கிறது.
என் மனம், ஆறாமல், அழுது கொண்டுதான் இருக்கிறது.
மனது கனத்தது...
ReplyDeleteVizhigal...eeramanadhu.....
ReplyDeleteகனக்கிறது என்று ஒன்றை தட்டிக்கழித்தால் பாரம் நெஞ்சில் அமர்கிறது. நல்ல நடை .
ReplyDeleteகதையா எழுதலாம்
ReplyDeleteவழியில்லாத வாழ்க்கை வலிமிகுந்த ஒன்று 🙏
ReplyDelete