உத்தம்பாளையத்தில் இருக்கும் என் மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என் ஐந்துமாத குழந்தைக்கு திடீரென்று காய்ச்சல். காலை நாலுமணி இருக்கும் . என் மைத்துனர் ப்ரூக் பாண். டீ ஸேல்ஸில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அவர் தினமும் காலை 4 மணி வாக்கில் ட்யூட்டிக்கு கிளம்பிவிடுவார் . அவருக்கு அன்று, குழந்தைக்கு காய்ச்சல் , என்பது தெரியாது. அவர் போனபின்பு குழந்தையின் உடம்பு திடீரென்று ஜில்லிண்டாகிவிட்டது, என் மைத்துனர் மனைவி. கமலாவும், நானும் பயந்து பக்கத்து வீட்டில் உள்ள, என் பெரியம்மாவை துணைக்கு அழைத்தோம்.
அவர் வந்து பார்த்துவிட்டு, "ஒண்ணுமில்லை. பயப்படாதே!",என்று சொல்லி விட்டு, "கஸ்தூரி மாத்திரை இருக்கா?" என்றார்.
கஸ்தூரி மாத்திரை, இருந்தது. கொண்டு வந்து குடுத்தேன்.
அதை பாலில் கரைத்து பாலாடையால் குழந்தைக்கு போட்டி, பிறகு குழந்தைக்கு நெஞ்சு முதுகு எல்லாம் குரு தைலம் தடவினார். ஆனால் எந்தவித முன்னேற்றமுமில்லை , நிலமை ரொம்ப மோசமாகி விட்டது.
நானும் கமலாவும ஓ....என்று பெரிதாக,சத்தமாக அழ, அது காலை வேளையில் ஊர் முழுக்க கேட்க, ஊரே, கூடம் முழுதும் கூடிவிட்டது!!
எல்லாரும் என்ன! ஏது! என்று பரபரக்க ஆளுக்கு ஒரு வைத்தியம் சொல்ல, (அந்த காலத்தில் phone)வசதி கிடையாது, குழந்தை வைத்தியரும் கிடையாது, பக்கத்தில் சற்குணம் என்ற சாதாரண டாக்டர், எல்லா உடல் கோளாறுக்கும் வைத்தியம் பார்ப்பவர்.
அவரை, வந்த கூட்ட த்தில் ஒருவர், போய் அழைத்து வந்தார்,
அவர் வந்து குழந்தையை தொட்டுப்பார்த்து விட்டு சிறிது யோசனையுடன் என்னைப்பார்த்தார், பிறகு, "அம்மா! குழந்தைக்கு உடல்நிலை ரொம்ப மோசமாகத்தான் இருக்கு. யாருக்காவது தகவல் சொல்லவேண்டியிருந்தால் , சொல்லி அனுப்புங்கள்!" , என்று சொல்லிவிட்டு போய்விட்டர்!
உத்தம்பாளையம் என் பாட்டியின் ஊர். நாங்கள் எல்லாரும் வளர்ந்த சொந்த ஊர். அதனால், அக்ரஹாரமே கூடி விட்டது.
இதன் நடுவில் என் கடைசி கொழுந்தன் கணா, பக்கத்தில் பத்துமைலுக்குள் டீகடைகளுக்கு டீ பாக்கெட் சப்ளை செய்யபோயிருந்த மைத்துணரை அழைத்துக்கொ
அவர் யாரையும் கவனிக்கவில்லை. நேராக குழந்தையிடம் வந்து, குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, ,கூட வந்த கிழவரை, "பாட்டையா!! குழந்தையைப்பாரு!!" என்றார் .
பாட்டையா என்பவர், வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிப்பவர் ,
அவர் ஒரு அழுக்கு வேஷ்டியை கட்டிக்கொண்டு இருந்தார்.
மேலே உடம்பில் சட்டை இல்லை, என் கொழுந்தர் "குழந்தையை பாரு", என்ற உடன் தன் இடுப்பில் உள்ள அழுக்கு வேஷ்டியிலுள்ள, மடிப்பிலிருந்து ஒரு குழாய் போன்ற சின்ன, தகர டப்பாவை எடுத்து திறந்து, அதிலிருந்த மருந்தை கொழுந்தர் மடியிலள்ள குழந்தையின் வாய்க்குள் அதாவது, (தொண்டைக்குள்) தன் ஆள்காட்டி விரலில் உள்ள மருந்தை வலுக்கட்டாயமாக செலுத்தினார்!!!
அந்தக்க்ஷணமே, குழந்தை குபீரென்று ஓரே கோழையாக வாந்தி எடுத்து, உடனே அழத்தொடங்கியது!!
கொழுந்தர் உடனே எழுந்து பாட்டையாவை கட்டிக்கொண்டு, "உனக்கு என்னவேணாலும் கேளு இப்பவே தரேன்!" என்றார் பாட்டையா, "எனக்கு ரெண்டு ரூபா குடு சாமி, போதும்!" என்றார்!
பிறகுதான் வாசலில் உள்ள சாமான்களை பார்த்தார். மைத்துனருக்கு கோபம் வந்துவிட்டது. "எல்லாரும் மொதல்ல வெளியே இருக்கிறதைதூக்கப் போட்டுட்டு வெளியே போங்க" என்று சத்தம் போட்டார்.
எல்லாரும் போனவுடன் எங்களை கோபித்துக்கொண்டார். "நான் வருவதற்குள் இப்படியா ஊரைக்கூட்டுவது? கணாதான் உடனே வந்து, தகவல் சொல்லி, வருவதற்குள் என்ன அவசரம்? நல்ல வேளை! எல்லாம் நல்லதாக முடிந்தது!" என்று சொல்லி பாட்டையாவுக்கு. நூறு ரூபாய் கொடுத்தார்!!
அந்தநாள் எனக்கு மறக்கமுடியாத நாள் .
இதெல்லாம் நடந்தது 1948ல்!!
இப்பொதுஅவனுக்கு வயது 67.
பாட்டையா குழந்தைக்கு கொடுத்த மருந்து, கஸ்தூரி மெழுகு ..........
அவன் தான் ஜானகிராமன்!!!!
அப்படி என்ன சாமான்கள் வாசலில் இருந்தது?
ReplyDeleteIndha kadhai kekka enakku romba pidikkum patti :)
ReplyDeleteகஸ்தூரி மெழுகு-னா என்ன?
ReplyDeleteபுனர்ஜென்மம் கொடுத்த அந்த கிழவரை சித்தப்பா எப்படி கண்டுபிடிச்சார் பாட்டைய்யா பட்டையை கிளப்பிவிட்டார் கஸ்தூரி
ReplyDeleteமெழுகு கஸ்தூரி மான் தோலிலிருந்து வரும் வாசனை மெழுகா?
அம்மா ஆர்வத்தோடு படித்தேன் மைத்துனர் மற்றும் குழந்தை யார் சஸ்பென்ஸ் ம்ம்ம்ம் நன்னா எழுதிருக்கேள்
kasturi janakiraman
Delete