வீடு உயிருள்ள ஜடப்பொருள். அது எல்லாம் பார்க்கும்.நம் கஷ்டம் பொறுக்கும்.
ஆனால் இப்போது தான் நம் கண்ணுக்கும்,மனதுக்கும் அது தோன்றுகிறது.நான்
பிறந்த வீடு என்று போனதுஅதுதான் .மாடிகட்டுவதற்கு முன் கிழே,இரண்டு ரூம் சமையளுள்,கூடம்,வாசல் வராண்டா.இரண்டு லெட்ரின். அதில் எத்தனை பேர் ..
பாட்டியுடைய நான்கு பேரன்கள்,மூன்று பேத்திகள் ,ஒரு கொள்ளு பேரன் ,பாட்டியுடைய
ஒரே பெண். பாட்டி அம்மா என்றுதான் பெண்ணை கூப்பிடுவாள் .மாமாக்கள் சாம்பசிவன்,
நடராஜன் ,பாட்டியை தவிர ,அந்த வீட்டில் எல்லோரும் கனவுலகில் சஞ்சரிப்பவர்கள் .(இதெல்லாம் மாமாவின் கல்யாணத்துக்கு முன் )
அவர்கள் பாட்டுக்கு ஹாலில் ,உட்கார்ந்து ,சதா தம்புரா ஸ்ருதியுடன் ,பாடுவதும்,வீணை ,
பிடில் ,புல்லாங்குழல், என்று ,வாசிப்பதும், கதை புத்தகங்களை ,படிப்பதும் ராமகிருஷ்ணர் ,ரமணர், இவர்களை ,பற்றி ,சதாபேசிக்கொண்டு ,கவிதைகள்,பாட்டு ,எழுதிக்கொண்டு ,என்று வாழ்ந்தவர்கள் .
பிறகு ,பேரன்கள்,பாட்டெல்லாம் தெரியாதவர்கள்,வேலைக்கு போக ஆரம்பித்தார்கள் .
மாமாவுக்கும் கல்யாணம் ஆயிற்று .இந்த சந்தடியில் ,நான் வருஷம் தவறாமல் ,என் குழந்தைகள் ஆறு பேருடன், (போகிறமே,அவர்களுக்கு ,ஸ்ரமமாக இருக்காதா,என்று துளியும், யோசிக்க தெரியாமல் ) போய் ஒரு மாதம் தங்குவேன் .
இத்தனை பேரையும் குங்கும செப்ப்பாட்டம்,வீட்டில் ,முகம் சுளிக்காமல் ,பஜ்ஜி என்ன
பகோடா என்ன ,அடை ,முறுக்கு, சீடை பட்ஷனங்கள்,எல்லாம் பண்ணி ,எங்கள் சந்தோஷத்தை ,பார்த்து ,சந்தோஷபட்டவள் பாட்டி .எனக்கு சென்னையை வேறு ,சுற்றி காண்பித்து ,சாமானெல்லாம் ,வாங்கி தருவாள் .என் அம்மா நிறைய சமையல் செய்வாள் .சகல வாத்தியங்களையும் தம்பிகளுடன் உட்கார்ந்து வாசிப்பாள்.இதெல்லாம் பார்த்து அந்த வீடு ஒரு காலத்தில் சந்தோஷமடைந்திருக்கும்.
பிறகு மாமா மாடி கட்டினார் .கீழே வாடகைக்கு வைத்தார் .ஸ்ரீதர் பெரியவனாகி ,சரியான விஷமம்,அவனை லல்லி, லீலி ,கட்டி மேய்த்து ,அவனை பற்றி அழுது,சிரித்து,பெரியவன் ஆக்கினார்கள் .பட்டிக்கு ஸ்ரீதரன் உயிர் .அவனை யார் என்ன செய்தாலும் கோபம் வரும் .
மன்னியும் அப்படியே .எல்லா லூட்டியும் அடித்து இப்போது அவனை போல் பிள்ளை யாருக்கு கிடைக்கும் என்று உள்ளது..ஸ்ரீதரன் வளர்ச்சியை பார்த்து வீடு சந்தோஷமடைந்திருக்கும்.
லீலி கல்யாணம் . கையில் காசில்லாமல் கல்யாணம் .(இப்போதெல்லாம் மாதிரி கையில்
எல்லாம் தயாராக வைத்துகொள்ளவில்லை .அதற்கு உரிய வசதியும் இல்லை.)மிக
ஸ்ரமபட்டு லீலி கல்யாணம் மகாதேவன் தெரு வில் உள்ள இந்த வீட்டில் நடந்தது .
மறக்கமுடியாத கல்யாணம் .மொட்டை மாடியில் சாப்பாடு .இலையில் அப்பளாம்
போட்டவுடன் இலை ,அப்பளாம் ,எல்லாம் காற்றடித்து ,மூலைக்கு ஒன்றாய்பறந்து சம்பந்திகள்கோபித்து ,பாட்டி சமாதான படுத்தி ,கிழே ஹாலில் தனியாக பரிமாறி ,என்று,எவ்வளவோ அந்த வீட்டில் நடந்தது .
பிறகு ராதை, கணேசன் கல்யாணங்கள் .அதன் பிறகு சுகந்தாகல்யாணம் . ரொம்ப மகிழ்ச்சியாக நடைபெற்றன .மாம்பலம் வீடும் சந்தோஷமடைந்திருக்கும் .
இதற்கு மத்தியில் சாந்தி, சுப்ரமணியன், விஜயன், சிவகுமார்,வித்யா இவர்களெல்லாம் ,
அந்த வீட்டில் பிறந்து பெரியவர்களாகி சாந்தி பேரனும் அதே வீட்டில் பிறந்துள்ளான் .இவர்கள் எல்லாம் அந்த பெரிய வீட்டில் தவழ்ந்து ,நடந்து விளையாடினது ,எல்லாம் நினைவில் பசுமையாகநினைவு இருக்கு .இதையெல்லாம் அனுபவித்து அந்த வீடும்
சந்தோஷமடைந்திருக்கும் .
அதே வீட்டில், சமத்து குட்டி வித்யா,சின்ன வயதில் படுத்த படுக்கையாகி ,இறந்துபோனது ஆழங்காணமுடியாதசோகம் .
கமலா எப்போதும் டிரஸ் பண்ணிக்கொண்டு ,பளிச் என்று ,அந்த வீட்டில் வளைய வருவாள் . எப்போதும்முகத்தை பெருமையாக வைத்து கொண்டு இருப்பாள் .கோபம் வந்தாலும் தங்காது மாமிக்கு .நல்ல ரசனை உடையவள் .அவளுக்கு எப்போதும் ,ஜில்லென்று காற்று வீசணும் .எப்போதும் மின்விசிறி சுற்றி கொண்டே இருக்கணும் .காற்று நின்றால் படு கோபம் வரும் . அந்த அழகான வேப்பமரம் (இன்றும் உள்ளது ),
குயில் சத்தம்,மொட்டை மாடி ,நினைவை விட்டு அகலாது .அந்த வீடு எனக்கு மிகவும்
பிடிக்கும் .
பிறகு அந்த வீட்டில் சுகந்தாவின் கணவர் குருமூர்த்தி இறந்தது ,பாட்டி ,என்னையும் சுகந்தாவையும் கைக்குழந்தையுடன் , காலை இருட்டு பிரியுமுன் ,சுகந்தாவுடைய ,
நாத்தனார் வீட்டிலிருந்து ,மகாதேவன் தெரு வீட்டிற்க்கு, அழைத்துக்கொண்டு ,அழுதுகொண்டே ,அந்த வீட்டில் நுழைந்து ,கதறி தீர்த்து அழுத போது அந்த வீடும் நிச்சயம் அழுது இருக்கும் .பிட்சுரத்தினம் ஐயர் ,ரூமின் சைடு கதவின் கீழ் ,உட்கார்ந்து ,அழுது கொண்டே சாப்பிட்டார் .பாட்டி அவரை பார்த்து , பாவம் நீங்க ,பிள்ளை இறந்து
இங்கே சாப்பிடுவது மகாகொடுமை அன்று அவரை சமாதான படுத்தினார் .இந்த மாதிரி
அந்த வீட்டில் வித்யா ,குருமூர்த்தி இறந்தது பெரிய துக்கம் .
அந்த வீட்டிற்க்கு தெரியாத ரஹ்ச்யமில்லை .நடராஜ மாமா ,சதா அந்த வீட்டை
இடித்து ,கொஞ்சம் கொஞ்சமாய் , முன்னாலும்,பின்னாலும் ரூம்களை ,அதிகமாக்கினார் .
அவருடைய முக்கிய கவலை ,அந்த வீட்டை என்ன வெல்லாம் பண்ணி ,சௌகர்யம்
அதிகரிக்கலாம் என்ற யோசனைதான் .அப்படியும் அவருக்கு திருப்தி உண்டாகவில்லை .
திரும்ப திரும்ப கரையான் வந்து அவரை கரையனாக அரித்துவிட்டது .அந்த வீடு வாங்கி
சுமார் ஐம்பத்தி ஐந்து வருடங்கள் என்று நினைக்கிறேன்.
அந்த வீட்டை இடிக்கும்போது ,எனக்கு மனதுக்கு ரொம்ப கஷ்டமாய் இருந்தது எத்தனை
பேரை தாங்கி ,எத்தனை சுக துக்கங்களை பார்த்தது .சுவரெல்லாம் ,கதவெல்லாம் ,
வாயிருந்தால் ,லக்ஷ்மண ஐயரின் ,குடும்ப கதையை .பல நிகழ்ச்சிகளை பேசும் ..
பாட்டியின் குடும்பம் ,பெரிய சரித்திரம் . அந்த வீட்டில் மீனாக்ஷி பாட்டி என்ற ,முத்தின
ஆலமரத்த்லிருந்து,கிளம்பி வந்த விழதுகள் நாங்கள் .எங்களிடமிருந்து ,குட்டி குட்டியாக ,
விழுதுகள் கிளம்பி பரந்து விரிந்துள்ளது .வட ஆல விருட்சம் மூன்று இடத்தில்தான் ,
உள்ளது . மகாதேவன் தெரு வீட்டில் இருந்து ஆட்சி செய்த மீனாக்ஷி பாட்டி என்ற
ஆலமரத்தின் விழுதுகள் ,அமெரிக்கா,துபாய் ,என்று உலகமெங்கும் பரவியுள்ளது .
நாங்கள் பழைய மாம்பலம் ,மகாதேவன் தெரு 49number வீட்டைதான் , வட ஆலவிருக்ஷமஹத்தான் நினைக்கிறோம் .பாட்டி வாழ்ந்து ,எங்கள் எல்லோருக்கும் ,
நல்ல வாழ்க்கையை அமைத்து தந்து ,ஒவ்வொருவருடைய ,கஷ்டங்களையும் ,ஊன்றி
கவனித்து ,ஆறுதல் சொல்லி ,நிழலாக இருந்த பாட்டி வாழ்ந்த , அந்த வீட்டை ,அங்கு இருந்த ,செடிகளை,வேப்ப மரத்தை என்னால் மறக்கமுடியாது .இதை எழுதும்போது ,
நான் உணர்ச்சி வசப்பட்டு ,கண் கலங்கினேன் . வீட்டை இடிக்கலாம் , ஆனால்
எங்கள் மனதிலுள்ள ,வேப்பமரத்து பங்களா , பாட்டியுடன் எங்கள் மனதில் அழியா
சித்திரமாக ,இடிக்கபடாமலே இருக்கும் .
ஆனால் இதில் ஒரு சந்தோஷமும் கூட.அந்த வீடு வேறு ஒருவர் கையில் போகமால்
பாட்டியுடைய ஆசிர்வாதத்தால் ,மாமாவின் பிள்ளைகளுக்கும்,கொள்ளுபேரனுக்கும்,
சௌகர்யமாக வசிப்பதற்கு ,மாடர்னாக ,அடுக்கு மாடி குடியிருப்பாக கட்டுவது
மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .நல்ல வேளையாக வேப்பமரம் இருக்கிறது .பழைய
நினைவுகள் அழியாமல் ,அதே இடத்துக்கு நாங்களும் மிகுந்த சந்தோஷத்துடன் ,
போய் வந்து கொண்டு இருப்போம் .எங்கள் பாட்டியின் ஆசிர்வாதம்தான் புது வீடும்..
சாந்தி பாட்டியாகி ,அவள் கொள்ளுபேரன் ,பேத்திகளுடன் அந்த வீட்டில் நெடு நாள்
வாழ்ந்து ,சந்தோஷமாக இருக்க என்னுடைய மனபூர்வமான ஆசிர்வாதம் .
சாந்தியின் பேரன்களும் இதே போல் நிறைய வீடு கட்டுவார்கள் .என்னைப்போல் ,அவள்
பேரன் பேத்திகள் ,சாந்தியையும் அவள் வீட்டையும் ,பெருமையாக பேசுவார்கள் .
இதுதான் மாறி வரும் உலகின் அதிசயம் .
பாட்டி,
ReplyDeleteரொம்ப அழகாக எழுதிருக்கேள். எனக்கு ரொம்ப பிடித்தது.
வந்தனா..
Periamma;
ReplyDeleteI had tears in my eyes reading it. Especially the part about Meenakshi patti. Her blessings will always be with us. She was a great soul.
Kalpana
Periamma:
ReplyDeleteAmma asked me to tell you that you have written beautifully. She is reminded of those years when she lived there. She felt very emotional reading it.
Kalpana
பாட்டி
ReplyDeleteஇன்னிக்கு தான் இத பாத்து படிச்சென் - ரொம்ப அழகா எழுதிருக்கெள்.
வனிதா
என்னுடைய கனவிகளில் இன்னும் அந்த பழைய வீடுதான் வருகிறது. நீங்கள் எழுதியிருப்பதற்கு பிறகு நடந்த இன்னும் பல விஷயங்கள் என் நினைவில் உள்ளது. எழுத நேரமும், எல்லாவற்றையும் எழுத தயக்கமும் கூடவே உள்ளது. இப்படிப்பட்ட இந்த வீட்டில் குடும்பத்தில் இருந்து வந்து இப்போது ஒருவரின் மேல் ஒருவர் வெறுப்பு இல்லாமல் இருந்தாலே போதும் என்று ஆகிவிட்டதே. அன்பும் பாசமும் வேரிலிருந்து பிரிந்த பிறகும் இருந்தால்தான் மரத்திற்கு பெருமை. இந்த மரத்திற்கு அந்த பெருமை இருக்குமா? உங்களை எல்லாம் பார்த்து உறவுகளின் பெருமையறிந்துதான் வளர்ந்தேன், இன்று எல்லாம் விடுபதும் நிலையில் பார்த்து செய்வதறியாமல் விழிக்கிறேன். மீண்டும் இந்த மாதிரி ஒன்று வராது, இப்போது இருக்கும் குடும்ப சூழ்நிலையில் ஒன்றை உருவாக்கவும் முடியாது. நீங்கள் ஒருவர்தான் இப்போது இருக்கும் ஒரே பாலம். உங்கள் மூலமாக மட்டுமே குடும்பத்தை உணர்கிறேன், சற்று வருத்தத்துடன் எதிர்காலத்தைப் பற்றி கவலையுடன்....
ReplyDelete