Saturday, August 6, 2011

தமிழ் பழமொழிகள் பாகம் ஒன்று

தமிழ் பழமொழிகள் :

தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை .

.அழுத பிள்ளை பால் குடிக்கும்

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் .

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஊர் கூடி தேர் இழுக்கும் .

மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்துவான் .

பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் .

தனி மரம் தோப்பு ஆகாது .

நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது .

மாமியார் உடைத்தால் மண்குடம் ,
மருமகள் உடைத்தால் பொன்குடம் .

அத்தைக்கு மீசை முளைத்தால் , சித்தப்பா .

அன்புக்கும் உண்டோ , அடைக்கும் தாழ் .

அகல உழுவதை விட ஆழ உழு .

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் .

அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா.

அப்பா வின் அருமை மறைந்தால்  தெரியும் .

அசைந்து தின்னும் யானை ,
 அசையாது தின்னும் வீடு .

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

அடாது செய்வபவன் படாது படுவான் .

ஏழை சொல் அம்பலம் ஏறாது .

அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் .

ஆற்றில் போட்டாலும் , அளந்து போடு .

யானைவரும் பின்னே , மணி ஓசை வரும் முன்னே.

அஞ்சு பெற்றால் , அரசனும் ஆண்டியாவான் .

அழுதாலும் சிரிச்சாலும் ,அவளே
 பெற்றாகானும் பிள்ளையை .

குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்
குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் .

யானைக்கு ஒரு காலம் வந்தால் ,
 பூனைக்கு ஒரு காலம் வரும் .

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு .

யானைக்கும் அடி சறுக்கும் .

இஞ்சி லாபம் மஞ்சளில் .

ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை .

ஆள் பாதி , ஆடை பாதி .

இக்கரைக்கு அக்கரை பச்சை .

ஆழம் தெரியாமல் , காலை விடாதே .

விருந்தும் மருந்தும் மூன்று நாள் .

இளங்கன்று பயமறியாது .

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் .

தாயை தண்ணீர் கரையில் பார்த்தல் ,
மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டாம்
.
அண்ணனுக்கு தம்பி தாயாதி .

எட்டி பழுத்தென்ன , எருக்கு பூத்தென்ன .

பிராமனர்தகாரனுக்கு நெய் விலை எதற்கு ?

சோத்துல உள்ள கல்லை பொறுக்காதவன் ,
 சொக்கநாதர் கோவில் வரிகல்லை 
பிடுங்குவானா ?

கேழ்வரகுல நெய் ஒழுகுதே என்றால்,
கேட்பவன் புத்தி எங்கே போச்சு ?

உழவு மாடு படுத்தால் உழவன் என்ன செய்வான் ?

பானை பிடித்தவள் பாக்கியசாலி ,
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் .

உழக்குல கிழக்கு மேற்கு பார்க்கலாமா ?

மூத்தாள் நல்லவள் என்றல்
இளையவள் பொல்லாதவளா?

பாம்பு என்று தாண்டவும் முடியாது ,
 பழுதை என்று மிதிக்கவும் முடியாது .

நரம்பில்லாத நாக்கு நாளும் பேசும் .

பல்லு போனா சொல்லு போச்சு .

கழுதை தேய்ந்து கட்டரும்பு ஆச்சு .

யானை படுத்தால் குதிரை மட்டம் .

மூத்தாள் வாழ்வோ , முழங்கை இடியோ .

நாய்க்கு வேலையில்லே ,
 குந்தி இருக்க நேரம் இல்லே .

மூடின முத்து லோகம் பெரும் .

பாட பாட ராகம் , மூடமூட ரோகம் .

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் .

பிள்ளையார் பிடிக்க , குரங்கா முடிஞ்சது .

தான் ஆடவிட்டாலும் . தன் சதை ஆடும் .

ஊருக்கடி உபதேசம் , உனக்கல்லடி கண்ணே .

புகையில விரிஞ்சா போச்சு, பொண்ணு சிரிச்சா போச்சு .

உரலுக்கு ஒரு பக்கம் இடி ,
 மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி .

பழம் நழுவி பாலில் விழுந்தது ,

ஆத்தோட தண்ணி போனாலும் ,
 நாய் நக்கி தான் குடிக்கும் .

உழவன் கணக்கு பார்த்தால்,
 உழக்கு அரிசி மிஞ்சாது .

சாண் ஏறினால், முழம் சறுக்கும் .

தன் நிழல் தன்னோட , தன் பாவம் பின்னோட .

பல்வலிக்காரனை பார்த்து ,
சௌக்கியமா என்று கேட்காதே .

ஊர் இரண்டு பட்டா , கூத்தாடிக்கு கொண்டாட்டம் .

தானம் கொடுத்த மாட்டை
பல்லை பிடித்து பார்த்தானாம்.

ஆடிகாத்துலே அம்மியும் பறக்கும் .

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,
தன் பிள்ளை தானே வளரும் .

முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்காதே .

கண்டா காமாட்சி நாயக்கன் , காணாட்டா வடுகபய .

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் .

விதை ஒன்று போட்டால் , சுரை ஒன்று முளைக்குமா ?

கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

உழக்கு பதக்கு ஆகுமா ?

ஒடரவனகண்டா விரடரவனுக்கு எளிது .

சாண் இடமானாலும் தன் இடம் .

வெறும் கை முழம் போடுமா ?

சாண் ஏறினால் முழம் சறுக்கும் .

எடுத்து வைத்தாலும் , கொடுத்து வைக்கணும் .

தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா ?

வளர்த்த கடா மார்ல பாயும் .

தென்னை மரத்திலே தேள் கொட்டின
பனைமரத்தில்நெறி கட்டுமா ?

ஊருக்கு ராஜாவானாலும் , தாய்க்கு பிள்ளை தான் .

ஊருக்கு இளைச்சவன் , பிள்ளையார் கோவில் ஆண்டி .

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

ஆடு வந்தா அப்பவே , மாடு வந்தா முன்னமே .

இருந்து தின்னா சுவரும் கரையும் .

ஆட்டுக்கு வால் அளந்து வச்சுருக்கு .

பலா சுளையில் ஈ மொய்ப்பது போல 

சுண்டக்கா கால் பணம் , சுமை கூலி முக்கால் பணம் .

ஒரு கை ஓசை எழுப்பாது .

அய்யர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்குமா ?

கடலில் அலை ஓய்வது எப்போ ,
ஸ்நானம் செய்வது எப்போ ?

ஓட்டை கப்பலுக்கு ஓன்பது மாலுமி .

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா ?

பழக பழக பாலும்  புளிக்கும் .

கடுகு போன இடம் ஆராய்வார் ,
 பூசணிக்காய் போன இடம் தெரியாது .

கடவுளை நம்பினவர் கைவிடப்படார் .

பதறாத காரியம் சிதறாது .

கனிந்த பழம் தானே விழும் .

கட்டி கொடுத்த சோறும் , கற்று  கொடுத்த சொல்லும் ,
 எத்தனை நாள் வரும் ?

கண்டதே காட்சி , கொண்டதே கோலம் .

இருப்பவனுக்கு ஒரு வீடு , இல்லாதவனுக்கு பல வீடு .

காரியம் பெரிதா , வீரியம் பெரிதா ?

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்ச நிறம் .

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் .

கிட்டாதாயின் வெட்டென மற.

பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே
.
கெடுவான் கேடு நினைப்பான் .

பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும் .

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .

கோத்திரமறிந்து பொண்ணை கொடு ,
 பாத்திரமறிந்து பிச்சை எடு .

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் .

பணக்காரன் பின்னால் பத்து பேர் ,
 பைத்தியக்காரன் பின்னால் பத்து பேர் .



கணக்கை பார்த்தால் பிணக்கு வரும் .

பந்திக்கு முந்து படைக்கு பிந்து .

பாம்பென்றால் படையும் நடுங்கும் .

நிறை குடம் நீர் தளும்பாது .

பல்லு போனா சொல்லு போகும் .

பகலில் பக்கம் பார்த்து பேசு , இரவில் அதுவும் பேசாதே .

படிக்கிறது ராமாயணம் , இடிக்கிறது பெருமாள் கோவில் .

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .

இனம் இனத்தோடு சேரும் .

புத்திமான் பலவான் ஆவான் .

நாயை கண்டால் கல்லை காணோம் , கல்லை 
கண்டால் நாயை காணோம் .

கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை ,
கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை .

சுத்தம் சோறு போடும் ,எச்சில் இரக்க வைக்கும்

சாது மிரண்டால் காடு கொள்ளாது .

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட ,
சண்டைக்காரன் காலில் விழலாம் .

கருப்பு அழகு , காந்தலே ருசி .

சிவப்புஒரு அழகு, சூடு ஒரு ருசி .

சும்மா கிடக்கிற சங்கை ஊதி ,
கெடுத்தானாம் ஆண்டி .

சோத்துக்கு கேடு , பூமிக்கு பாரம் .

வாய் சர்க்கரை , கை கருணை கிழங்கு .

நெருப்பு இல்லாமல் புகையுமா ?

அஞ்சிலே விளையாதது ,
ஐம்பதிலே விளையுமா .

பெண் என்றால் பேயும் இறங்கும் .

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் .

ஆறின கஞ்சி பழங்கஞ்சி .

இறைக்க ஊறும் மணற்கேணி ,
இய பெருகும் பெருஞ்செல்வம் .

எண் சாண் உடம்பிற்கு ,சிரசே பிரதானம் .

பொறுமை கடலினும் பெரிது .

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் .

உள்ளங்கை நெல்லிக்கனி போல .

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்.

எறும்பு ஊற கல்லும் தேயும் .

எழுதியவன் ஏட்டை கெடுத்தான்,
படித்தவன் பாட்டை கெடுத்தான் .

கறந்த பால் மடி புகாது .

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது .

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் .

களவும் கற்று மற.

காற்று உள்ளபோதே , தூற்றிகொள்.

குட்டுபட்டாலும் மோதிரக்கையால் குட்டுபடு

குரைக்கிற நாய் கடிக்காது .

நிறைகுடம் நீர் தளும்பாது .

கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை .

கைபுண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா ?

கையிலே காசு , வாயிலே தோசை .

கொடிக்கு காய் பாரமா ,
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா .

கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும் .

சாது மிரண்டால் காடு கொள்ளாது .

தடி எடுத்தவன் தண்டல் காரனா .

தருமம் தலை காக்கும் .

மவுனம் கலக நாசம் .

தலை இருக்க வால் ஆடலாமா .

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் .

நத்தையின் வயற்றில் முத்து பிறக்கும் .

நாய் விற்ற காசு குறைக்குமா ?

ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் .

நாற்பது வயதில் நாய் குணம் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

நெருப்பில்லாமல் புகையாது .

நொறுங்க தின்றால் நூறு வயது .

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு .

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .

மழை விட்டும் தூவானம் விடவில்லை .



















No comments:

Post a Comment