Monday, August 8, 2011

தமிழ் பழமொழிகள் = பாகம் மூன்று

நல்லவனுக்கு அடையாளம் , சொல்லாமல் போவது .

விழியுள்ளவன் வாசல்ல வருவான் .

நாயா அலைஞ்சாலும் , பேயா திரிஞ்சாலும் ,
எது கிடைக்குமோ , அதான் கிடைக்கும் .

லோபிக்கு இரட்டை சிலவு .

கைபுண்ணுக்கு கண்ணாடி வேணுமா .

முதுகொடிஞ்ச மாடு மாதிரி .

உரல்ல தலையை கொடுத்தா
உலக்கைக்கு தப்ப முடியுமா ?

பொண்ணை கொடுத்தியோ,
கண்ணை கொடுத்தியோ .

ஒய்யார கொண்டையா , தாழம் பூவாம் ,
உள்ளே இருக்குமாம் , ஈறும் பேனும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடு .

சமுத்திரத்திலே கரைச்ச பெருங்காயம் மாதிரி .

கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல .

ருசி கண்ட பூனை , உரிக்கு உரி தாவுமாம்.


தாவரத்துக்கு அடிக்கற வெயில்
முற்றத்துக்கும் வரும் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

நல்லது போன தெரியும் ,
கெட்டது வந்தா தெரியும் 

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .

சுக்குக்கு மிஞ்சின மருந்து இல்லை ,
சுப்ரமணியனுக்கு , மிஞ்சிய தெய்வம் இல்லை.

கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாப்போல.

ஆம்படயான் அடிச்சது தெரியலே ,
கொழுந்தன் சிரிச்சது பெரிசா போச்சு .

தனிமரம் தோப்பாகுமா ?

பனைமரத்தின் கிழே பால் குடித்தாலும் ,
கள்ளு குடித்தான் என்றுதான் சொல்வார்கள் .

தண்ணீர் அடித்து தண்ணீர் விலகுமா ?

காலமறிந்து பயிர் செய் .

சுக்கு கண்ட இடத்திலே , பிள்ளையை பெரு.

காடு வா வா என்கிறது , வீடு போ போ என்கிறது.

ஆத்துல பாதி , சேத்துல பாதி, காலை வைக்காதே.

கண் கெட்ட பிறகு , சூரிய நமஸ்காரமா ?

கத்திரி காய்க்கு, கையும் . காலும் . முளைத்தாற்போல.

அரசமரத்தை சுற்றிவிட்டு , அடி வயற்றை, 
தொட்டு பார்த்தாளாம் .

குளத்தில போட்ட பொருளை ,
ஆற்றில் தேடினா கிடைக்குமா ?

மாவு இருக்கும் மணம் போல இருக்கும்,
கூழின் குணம்.

எள்ளுதான் எண்ணெய்க்கு காயறது ,
எலி புழுக்கை எதுக்கு காயறது.

குடத்திலே ஏத்தின விளக்கு போல..

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது .

துடைப்ப கட்டைக்கு , பட்டு குஞ்சலம் கட்டினது போல.

கேட்டா கேளு , விட்டா விடு .

அடியாத மாடு பாடியது .

உயர உயர பறந்தாலும், ஊர் குருவி , பருந்தாகுமா ?

பக்கத்துக்கு வீட்டை பகைகாதே .

அழையாத வீட்டில் நுழையாதே.

கண்ணை திற என்றால் , வாயை தொறக்கரையே.

குறத்தி பிள்ளை பெத்தா,
குறவன் மருந்து முழிங்கினானாம்.

அஞ்சு ஊராம், பஞ்சாயத்து.

கிழவன் பேச்சை கின்னரக்காரன் கேட்பானா?

கிடக்கிறதெல்லாம் , கிடக்கட்டும் ,
கிழவனை தூக்கி மனைலே வைன்னாளாம்.

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,
தொன்னை நெய்க்கு ஆதாரமா?

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா?

விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்று முளைக்குமா?

மொட்டைத்தலைக்கும் , முழங்காலுக்கும்
முடிச்சு போடாதே .

அப்துல் காதருக்கும் , அமாவாசைக்கும் ,
என்ன சம்பந்தம் ?

தடி எடுத்தவன் , தண்டல்காரனா?

காசை கரியாக்காதே .

குரங்கு கையில் பூமாலை கொடுத்தாப்போல .

சீப்பை ஒளிச்சு வைத்தால் , கல்யாணம் நிற்குமா ?

ஊர்லே கல்யாணம், மார்லே சந்தனம்.

இல்லைங்கறவனுக்கு, ஒரு கவலையும் இல்லை .
இருப்பவனுக்கு , ஆயிரம் கவலை .

ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு.

எத்தை தின்னா பித்தம் தீரும் .

கிட்ட போனா , முட்ட பகை .

உயிரோடு உள்ள போது, ஒரு முத்தத்தைகாணோம்
சாகும்போது , ஒரு கோடி முத்தமாம் .

ஆசையிருக்கு , தாசில் பண்ண ,
அதிர்ஷ்டம் இருக்கு , மாடு மேய்க்க.

தங்க ஊசின்ன ,கண்ணுல குத்திக்க முடியுமா.

பகலில் பக்கம் பார்த்து பேசு ,
இரவில் அதுவும் பேசாதே .

அளவுக்கு மீறினால் , அமிர்தமும் நஞ்சு 

௦௦௦௦௦௦௦௦=======௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦======௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦===௦௦௦௦௦௦௦௦///////////=================================

விஜயலட்சுமி ராமசந்திரன் எழுதி கொடுத்த பழமொழிகள் .
======================================================

மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கனுமா ?

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .

வேலியே பயிரை மேய்ந்தால் .

கூழ் குடித்த குழந்தை குந்தாணி .

அரியும் சிவனும் ஒன்னு , அறியாதவன் 
வாயிலே மண்ணு .

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் .

கிணற்று நீரை , வெள்ளம் கொண்டு போகுமா ?

பெண் புத்தி , பின் புத்தி.

பெண் என்றால் பேயும் இறங்கும்.

வாய் புளிச்சதோ , மாங்காய் புளிச்சதோ.

துணிந்தவனுக்கு தூக்குமேடை ,
பணிந்தவனுக்கு பட்டு மெத்தை.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .

மண் குதிரையை நம்பி , ஆற்றில் இறங்காதே.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல .

வாயுள்ள பிள்ளை பொழைக்கும்.


சேது ராமன் (வந்தனா நண்பர் ) அனுப்பியது .

மதுரைக்கு வழி வாயில
 பாத்திரம் அறிந்து பிச்சை இடு
 
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்
 
எரியிற கூறையில பிடுங்கின வரை லாபம்
 
ஆண்டிக்கு வாய்ச்சது அத்தனையும் குருடு
 
ஓட்டை வீட்டுக்கு ஓன்பது வாசல்  .

பழுத்த மரம் தான் கல்லடி படும்

பனை மரத்தடியில் இருந்து பாலை குடித்தாலும்
அதை கள் என்று தான் சொல்வர்

அமாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் என்ன சம்மந்தம்

கைக்கு எட்டியது வாக்கு எட்டவில்லை

சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

ஆடின காலும் பாடின வாயும் நிற்காது

பாம்பென்றால் படையும் நடுங்கும்

இரு தலை கொள்ளி எறும்பு போல

கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது


=========================================


இதுவரை அனுப்பிய பழ மொழிகளில் ,
சில திருத்தங்கள் .
=================================================



Corrections:

சண்டி  குதிரைக்கு சறுக்கினது சாக்கு

நாய் விற்ற காசு குறைக்காது 
மீன் விற்ற காசு நாறாது

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனா?

நிறைகுடம் தளும்பாது .   Also repeated.

இறைக்க ஊறும் மணற்கேணி ,
ஈய பெருகும் பெருஞ்செல்வம் .

அஞ்சிலே ளையாதது ,ஐம்பதிலே ளையுமா .

தென்னை மரத்திலே தேள் கொட்டினா பனைமரத்தில்நெறி கட்டுமா ?

கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா  ?

அழுதாலும் சிரிச்சாலும் ,அவளே
 
பெற்றாகணும்  பிள்ளையை .

நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும் .

நன்றி : சேது ராமன்.

























Sunday, August 7, 2011

தமிழ் பழமொழிகள் = பாகம் இரண்டு .

ஆடிய காலும் பாடிய நாவும் சும்மா இராது .

சீலை இல்லன்னு சின்னாயி வீட்டுக்கு போனாளாம்,
அவ ஈச்சம்பாயை கட்டிண்டு எதிர்க்க வந்தாளாம்.

ஆச்சானுக்கு பீச்சானாம்,
மதனிக்கு உடன் பிறந்தானம் .

உடன் பிறந்தே கொல்லும் வியாதி

பாவம்னு பழம் புடவை கொடுத்த ,
இழுத்து இழுத்து முழம் போட்டாளாம்.

புளியங்காயில் புளிப்பை புகுத்த முடியமா ?

வடையை தட்ட சொன்னாளா ?
துளையை எண்ண சொன்னாளா?

மாடு முன்னாடி போனா ,
கன்னுக்குட்டி பின்னாடி போகும் .

கட்டோடு கரும்பு இருந்தா 
புத்தோடு எறும்பு வரும் .

இருந்த இடம் பள்ளம் .

எழுந்திருக்க சொல்றியே ,
என் பாவம் கொட்டிகறேயே.

அண்ணா எப்போ சாவான் ,
திண்ணை எப்போ காலி ஆகும் ?

காக்கா உட்கார பனம் பழம் விழுந்ததாம் .

குருவி தலைலே பனங்காய் வைச்சாப்போல.

குருவி கூட்டை கலைச்சாபோல.

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை ,
போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை .

ஆடு நனையுதே என்று ,
ஓநாய் அழுததாம் .

மூக்கு உள்ளவரை சளி இருக்கும் .
(குஞ்சம்மா அத்தை சொன்னது )

அவ அவனுக்கு அரிச்ச ,
அவ அவன்தான் சொரிஞ்சுக்கணும் 
(குஞ்சம்மா அத்தை சொன்னது )

வாத்தியார் பிள்ளை மக்கு ,
போலீஸ்காரன் பிள்ளை திருடன் .
(அப்பா அடிக்கடி சொல்வது )

கூரைலே சோற்றை இறைத்தால் ,
ஆயிரம் காக்கை கொத்த வரும் .

சாண் பிள்ளை ஆனாலும் , ஆண் பிள்ளை .

அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு .

அத்தைக்கு மருமாள் , அடைக்கு வெல்லம்.

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா ?

ஆடு பகை , குட்டி உறவு .


( கிழே உள்ளவை அப்பா அடிக்கடி சொல்வது )

காலுக்கு உதவாத செருப்பை கழட்டி தூர ஏறி .

அழகு சோறு போடுமா ?

பகலிலேயே பசு மாடு கண்ணுக்கு தெரியாது .

தாய் எட்டடி பாய்ந்தால் , குட்டி பதினாறு அடி பாயும் .

கஞ்சி வரதப்பா , எங்கே வரதப்பா ?

ஆக்க பொறுத்தவனுக்கு,ஆற பொறுக்கலையே .

மீண்டும் மற்றவை :
==================

அடுப்படியே கோவில் , ஆம்படையானே தெய்வம் .

தாய் அறியாத சூலுண்டா ?

ஒருவர் அறிந்தால் ரகசியம் ,
இருவர் அறிந்தால் அம்பலம் .

பூனை கண்ணை மூடினா,
உலகம் அஸ்தமித்து விடுமா ?

அரை பணம் கொடுத்து ஆட சொன்னாளாம் ,
ஒரு பணம் கொடுத்து ஓய சொன்னாளாம் .

தும்பை விட்டு வாலை பிடிபாளோ?

ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு ,
அவசரக்காரனுக்கு அறிவு மட்டு .

தன் மனுஷா அழ அழ சொல்லுவா ,
பிற மனுஷா சிரிக்க சிரிக்க சொல்லுவா .

தாயும் பிள்ளையும் ஒன்னானாலும் ,
வாயும் வயிறும் வேறு வேறு .

கொக்குக்கு ஒண்ணே மதி .

சுருங்க சொன்னாலும் ,
விளங்க சொல்லு .

காஞ்ச மாடு கம்புல விழுந்தா போல .

கழுதைக்கு தெரியுமா , கற்பூர வாசனை .

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா ?

காக்கா கான்னு கத்திதாம்,
அழலென்னு ஆம்படையான கட்டிண்டாளாம்.

கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை .

முத்தத்து முருங்கை பூ ,
முதுகிலே விழுந்து ,
முதுகெல்லாம் வலிச்சதாம் .

தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் .

காரியம் ஆகும் வரை காலை பிடி .

நாய் வித்த காசு குறைக்குமா ?

சாது சாதுன்கர சன்யாசிக்கு,
ஊருக்கு நாலு பிள்ளையாம் .

சூரியனை பார்த்து நாய் குறைதாப் போல.

நக்க வாயன் தேடி வச்சான் ,
நார வாயான் அழிக்க வந்தான் .

அவர் அவர் கவலையை அவர் அவர் படணும்,
அடுத்தவர் பட முடியுமா ?

பொய் சொன்னாலும் பொருத்தமாய் சொல் .

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது .

விரலுக்கு தக்க வீக்கம் இருக்கணும் .

பேய்க்கு வாக்கபட்டா ,
புளிய மரத்திலே ஏறி ஆகணும் .

உப்புக்கு சப்பாணி ஊருக்கு மாங்கொட்டை .

காசையும் கொடுத்து , தேளையும் கொட்டிண்டாளம்.

குளத்து மேல கோபித்துகொண்டு ,
கால் கழுவாமல் போனானாம் .

அடியேங்க ஆம்படையானை காணோம் ,
பிள்ளை பேரு சந்தானகோபலனாம் .

கூட்டத்திலே கோவிந்தா போடாதே .

குதிரை கொள்ளுன்னா வாயை திறக்குமாம் ,
புல்லுன்ன வாயை மூடுமாம் .

ஆடியிலே காத்தடிச்சா , 
ஐப்பசியிலே மழை வருமா ?

ஏறின ஏணியை எட்டி உதைத்தது போல ,

அண்ணா கிணத்திலே விழுந்துட்டான்ன
தம்பி , அண்ணா வேஷ்டி எல்லாம் எனக்கு தான் 
என்றானாம் .

ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான் ,
கண்ணு புளிச்சை எல்லாம் போசுன்னாளம்.

கொழுந்தனை அடிச்ச அடிலே ,
பொண்டாட்டி சரியாயிட்டாளாம்.

முந்தரி கொட்டை மாதிரி ,
முந்திண்டு வராதே .

நரிக்கு நாட்டாமை கொடுத்தா போல .

சாதுப்பசுவை கொட்டில்லே கட்டு ,
முரட்டு பசுவை எர்ல கட்டு .

அப்பம் சுட்டு கூழா போச்சு,
தொன்னை கட்டிக்கோ பிராமணா
என்றாளாம்.

ஆடதெரியாத தாசி , முற்றம் கோணல் என்றாளாம்.

பார்த்தா பசு , பாஞ்சா புலி .

சண்டைன்னா சக்கரகட்டி .

சோளகொல்லை பொம்மை மாதிரி .

எறும்பூற கல் தேயும் .

ஆடிப்பட்டம் தேடி விதை .

திணை விதைத்தவன் , திணை அறுப்பான் ,
வினை விதைத்தவன் , வினை அறுப்பான் .

புலி பசித்தாலும் , புல்லை தின்னாது .


( இன்னும் வரும் அடுத்த பாகத்தில் ).....



































.



























Saturday, August 6, 2011

தமிழ் பழமொழிகள் பாகம் ஒன்று

தமிழ் பழமொழிகள் :

தாயை போல பிள்ளை நூலைப்போல சேலை .

.அழுத பிள்ளை பால் குடிக்கும்

உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான் .

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது .

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஊர் கூடி தேர் இழுக்கும் .

மரம் வைத்தவன் தண்ணீர் ஊத்துவான் .

பாலுக்கும் காவல் பூனைக்கும் காவல் .

தனி மரம் தோப்பு ஆகாது .

நெருப்பு என்று சொன்னால் வாய் வெந்து விடாது .

மாமியார் உடைத்தால் மண்குடம் ,
மருமகள் உடைத்தால் பொன்குடம் .

அத்தைக்கு மீசை முளைத்தால் , சித்தப்பா .

அன்புக்கும் உண்டோ , அடைக்கும் தாழ் .

அகல உழுவதை விட ஆழ உழு .

அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான் .

அன்னம் இட்ட வீட்டில் கன்னம் இடலாமா.

அப்பா வின் அருமை மறைந்தால்  தெரியும் .

அசைந்து தின்னும் யானை ,
 அசையாது தின்னும் வீடு .

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

அடாது செய்வபவன் படாது படுவான் .

ஏழை சொல் அம்பலம் ஏறாது .

அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்.

வெயிலின் அருமை நிழலில் தெரியும் .

ஆற்றில் போட்டாலும் , அளந்து போடு .

யானைவரும் பின்னே , மணி ஓசை வரும் முன்னே.

அஞ்சு பெற்றால் , அரசனும் ஆண்டியாவான் .

அழுதாலும் சிரிச்சாலும் ,அவளே
 பெற்றாகானும் பிள்ளையை .

குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்
குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் .

யானைக்கு ஒரு காலம் வந்தால் ,
 பூனைக்கு ஒரு காலம் வரும் .

ஆறிலும் சாவு , நூறிலும் சாவு .

யானைக்கும் அடி சறுக்கும் .

இஞ்சி லாபம் மஞ்சளில் .

ஆலை இல்லாத ஊரில் இலுப்பை பூ சர்க்கரை .

ஆள் பாதி , ஆடை பாதி .

இக்கரைக்கு அக்கரை பச்சை .

ஆழம் தெரியாமல் , காலை விடாதே .

விருந்தும் மருந்தும் மூன்று நாள் .

இளங்கன்று பயமறியாது .

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் .

தாயை தண்ணீர் கரையில் பார்த்தல் ,
மகளை வீட்டில் போய் பார்க்கவேண்டாம்
.
அண்ணனுக்கு தம்பி தாயாதி .

எட்டி பழுத்தென்ன , எருக்கு பூத்தென்ன .

பிராமனர்தகாரனுக்கு நெய் விலை எதற்கு ?

சோத்துல உள்ள கல்லை பொறுக்காதவன் ,
 சொக்கநாதர் கோவில் வரிகல்லை 
பிடுங்குவானா ?

கேழ்வரகுல நெய் ஒழுகுதே என்றால்,
கேட்பவன் புத்தி எங்கே போச்சு ?

உழவு மாடு படுத்தால் உழவன் என்ன செய்வான் ?

பானை பிடித்தவள் பாக்கியசாலி ,
ஏர் பிடித்தவன் என்ன செய்வான் .

உழக்குல கிழக்கு மேற்கு பார்க்கலாமா ?

மூத்தாள் நல்லவள் என்றல்
இளையவள் பொல்லாதவளா?

பாம்பு என்று தாண்டவும் முடியாது ,
 பழுதை என்று மிதிக்கவும் முடியாது .

நரம்பில்லாத நாக்கு நாளும் பேசும் .

பல்லு போனா சொல்லு போச்சு .

கழுதை தேய்ந்து கட்டரும்பு ஆச்சு .

யானை படுத்தால் குதிரை மட்டம் .

மூத்தாள் வாழ்வோ , முழங்கை இடியோ .

நாய்க்கு வேலையில்லே ,
 குந்தி இருக்க நேரம் இல்லே .

மூடின முத்து லோகம் பெரும் .

பாட பாட ராகம் , மூடமூட ரோகம் .

சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் .

பிள்ளையார் பிடிக்க , குரங்கா முடிஞ்சது .

தான் ஆடவிட்டாலும் . தன் சதை ஆடும் .

ஊருக்கடி உபதேசம் , உனக்கல்லடி கண்ணே .

புகையில விரிஞ்சா போச்சு, பொண்ணு சிரிச்சா போச்சு .

உரலுக்கு ஒரு பக்கம் இடி ,
 மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி .

பழம் நழுவி பாலில் விழுந்தது ,

ஆத்தோட தண்ணி போனாலும் ,
 நாய் நக்கி தான் குடிக்கும் .

உழவன் கணக்கு பார்த்தால்,
 உழக்கு அரிசி மிஞ்சாது .

சாண் ஏறினால், முழம் சறுக்கும் .

தன் நிழல் தன்னோட , தன் பாவம் பின்னோட .

பல்வலிக்காரனை பார்த்து ,
சௌக்கியமா என்று கேட்காதே .

ஊர் இரண்டு பட்டா , கூத்தாடிக்கு கொண்டாட்டம் .

தானம் கொடுத்த மாட்டை
பல்லை பிடித்து பார்த்தானாம்.

ஆடிகாத்துலே அம்மியும் பறக்கும் .

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்,
தன் பிள்ளை தானே வளரும் .

முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்காதே .

கண்டா காமாட்சி நாயக்கன் , காணாட்டா வடுகபய .

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் .

விதை ஒன்று போட்டால் , சுரை ஒன்று முளைக்குமா ?

கோழி மிதித்து குஞ்சு சாகுமா ?

உழக்கு பதக்கு ஆகுமா ?

ஒடரவனகண்டா விரடரவனுக்கு எளிது .

சாண் இடமானாலும் தன் இடம் .

வெறும் கை முழம் போடுமா ?

சாண் ஏறினால் முழம் சறுக்கும் .

எடுத்து வைத்தாலும் , கொடுத்து வைக்கணும் .

தங்கச்சி பிள்ளை தன் பிள்ளை ஆகுமா ?

வளர்த்த கடா மார்ல பாயும் .

தென்னை மரத்திலே தேள் கொட்டின
பனைமரத்தில்நெறி கட்டுமா ?

ஊருக்கு ராஜாவானாலும் , தாய்க்கு பிள்ளை தான் .

ஊருக்கு இளைச்சவன் , பிள்ளையார் கோவில் ஆண்டி .

பூனைக்கு யார் மணி கட்டுவது ?

ஆடு வந்தா அப்பவே , மாடு வந்தா முன்னமே .

இருந்து தின்னா சுவரும் கரையும் .

ஆட்டுக்கு வால் அளந்து வச்சுருக்கு .

பலா சுளையில் ஈ மொய்ப்பது போல 

சுண்டக்கா கால் பணம் , சுமை கூலி முக்கால் பணம் .

ஒரு கை ஓசை எழுப்பாது .

அய்யர் வரும் வரை அம்மாவாசை காத்திருக்குமா ?

கடலில் அலை ஓய்வது எப்போ ,
ஸ்நானம் செய்வது எப்போ ?

ஓட்டை கப்பலுக்கு ஓன்பது மாலுமி .

கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா ?

பழக பழக பாலும்  புளிக்கும் .

கடுகு போன இடம் ஆராய்வார் ,
 பூசணிக்காய் போன இடம் தெரியாது .

கடவுளை நம்பினவர் கைவிடப்படார் .

பதறாத காரியம் சிதறாது .

கனிந்த பழம் தானே விழும் .

கட்டி கொடுத்த சோறும் , கற்று  கொடுத்த சொல்லும் ,
 எத்தனை நாள் வரும் ?

கண்டதே காட்சி , கொண்டதே கோலம் .

இருப்பவனுக்கு ஒரு வீடு , இல்லாதவனுக்கு பல வீடு .

காரியம் பெரிதா , வீரியம் பெரிதா ?

காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்ச நிறம் .

பழி ஓரிடம் பாவம் ஓரிடம் .

கிட்டாதாயின் வெட்டென மற.

பணம் பந்தியிலே , குணம் குப்பையிலே
.
கெடுவான் கேடு நினைப்பான் .

பட்ட காலிலே படும் , கெட்ட குடியே கெடும் .

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை .

கோத்திரமறிந்து பொண்ணை கொடு ,
 பாத்திரமறிந்து பிச்சை எடு .

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் .

பணக்காரன் பின்னால் பத்து பேர் ,
 பைத்தியக்காரன் பின்னால் பத்து பேர் .



கணக்கை பார்த்தால் பிணக்கு வரும் .

பந்திக்கு முந்து படைக்கு பிந்து .

பாம்பென்றால் படையும் நடுங்கும் .

நிறை குடம் நீர் தளும்பாது .

பல்லு போனா சொல்லு போகும் .

பகலில் பக்கம் பார்த்து பேசு , இரவில் அதுவும் பேசாதே .

படிக்கிறது ராமாயணம் , இடிக்கிறது பெருமாள் கோவில் .

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை .

இனம் இனத்தோடு சேரும் .

புத்திமான் பலவான் ஆவான் .

நாயை கண்டால் கல்லை காணோம் , கல்லை 
கண்டால் நாயை காணோம் .

கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை ,
கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை .

சுத்தம் சோறு போடும் ,எச்சில் இரக்க வைக்கும்

சாது மிரண்டால் காடு கொள்ளாது .

சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட ,
சண்டைக்காரன் காலில் விழலாம் .

கருப்பு அழகு , காந்தலே ருசி .

சிவப்புஒரு அழகு, சூடு ஒரு ருசி .

சும்மா கிடக்கிற சங்கை ஊதி ,
கெடுத்தானாம் ஆண்டி .

சோத்துக்கு கேடு , பூமிக்கு பாரம் .

வாய் சர்க்கரை , கை கருணை கிழங்கு .

நெருப்பு இல்லாமல் புகையுமா ?

அஞ்சிலே விளையாதது ,
ஐம்பதிலே விளையுமா .

பெண் என்றால் பேயும் இறங்கும் .

ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் .

ஆறின கஞ்சி பழங்கஞ்சி .

இறைக்க ஊறும் மணற்கேணி ,
இய பெருகும் பெருஞ்செல்வம் .

எண் சாண் உடம்பிற்கு ,சிரசே பிரதானம் .

பொறுமை கடலினும் பெரிது .

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் .

உள்ளங்கை நெல்லிக்கனி போல .

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்.

எறும்பு ஊற கல்லும் தேயும் .

எழுதியவன் ஏட்டை கெடுத்தான்,
படித்தவன் பாட்டை கெடுத்தான் .

கறந்த பால் மடி புகாது .

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது .

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும் .

களவும் கற்று மற.

காற்று உள்ளபோதே , தூற்றிகொள்.

குட்டுபட்டாலும் மோதிரக்கையால் குட்டுபடு

குரைக்கிற நாய் கடிக்காது .

நிறைகுடம் நீர் தளும்பாது .

கூழுக்கும் ஆசை , மீசைக்கும் ஆசை .

கைபுண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா ?

கையிலே காசு , வாயிலே தோசை .

கொடிக்கு காய் பாரமா ,
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா .

கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும் .

சாது மிரண்டால் காடு கொள்ளாது .

தடி எடுத்தவன் தண்டல் காரனா .

தருமம் தலை காக்கும் .

மவுனம் கலக நாசம் .

தலை இருக்க வால் ஆடலாமா .

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் .

நத்தையின் வயற்றில் முத்து பிறக்கும் .

நாய் விற்ற காசு குறைக்குமா ?

ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் .

நாற்பது வயதில் நாய் குணம் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

நெருப்பில்லாமல் புகையாது .

நொறுங்க தின்றால் நூறு வயது .

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.

நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு .

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் .

மழை விட்டும் தூவானம் விடவில்லை .