Monday, August 8, 2011

தமிழ் பழமொழிகள் = பாகம் மூன்று

நல்லவனுக்கு அடையாளம் , சொல்லாமல் போவது .

விழியுள்ளவன் வாசல்ல வருவான் .

நாயா அலைஞ்சாலும் , பேயா திரிஞ்சாலும் ,
எது கிடைக்குமோ , அதான் கிடைக்கும் .

லோபிக்கு இரட்டை சிலவு .

கைபுண்ணுக்கு கண்ணாடி வேணுமா .

முதுகொடிஞ்ச மாடு மாதிரி .

உரல்ல தலையை கொடுத்தா
உலக்கைக்கு தப்ப முடியுமா ?

பொண்ணை கொடுத்தியோ,
கண்ணை கொடுத்தியோ .

ஒய்யார கொண்டையா , தாழம் பூவாம் ,
உள்ளே இருக்குமாம் , ஈறும் பேனும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடு .

சமுத்திரத்திலே கரைச்ச பெருங்காயம் மாதிரி .

கண்ணை விற்று சித்திரம் வாங்கியது போல .

ருசி கண்ட பூனை , உரிக்கு உரி தாவுமாம்.


தாவரத்துக்கு அடிக்கற வெயில்
முற்றத்துக்கும் வரும் .

நிழலின் அருமை வெயிலில் தெரியும் .

நல்லது போன தெரியும் ,
கெட்டது வந்தா தெரியும் 

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .

சுக்குக்கு மிஞ்சின மருந்து இல்லை ,
சுப்ரமணியனுக்கு , மிஞ்சிய தெய்வம் இல்லை.

கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாப்போல.

ஆம்படயான் அடிச்சது தெரியலே ,
கொழுந்தன் சிரிச்சது பெரிசா போச்சு .

தனிமரம் தோப்பாகுமா ?

பனைமரத்தின் கிழே பால் குடித்தாலும் ,
கள்ளு குடித்தான் என்றுதான் சொல்வார்கள் .

தண்ணீர் அடித்து தண்ணீர் விலகுமா ?

காலமறிந்து பயிர் செய் .

சுக்கு கண்ட இடத்திலே , பிள்ளையை பெரு.

காடு வா வா என்கிறது , வீடு போ போ என்கிறது.

ஆத்துல பாதி , சேத்துல பாதி, காலை வைக்காதே.

கண் கெட்ட பிறகு , சூரிய நமஸ்காரமா ?

கத்திரி காய்க்கு, கையும் . காலும் . முளைத்தாற்போல.

அரசமரத்தை சுற்றிவிட்டு , அடி வயற்றை, 
தொட்டு பார்த்தாளாம் .

குளத்தில போட்ட பொருளை ,
ஆற்றில் தேடினா கிடைக்குமா ?

மாவு இருக்கும் மணம் போல இருக்கும்,
கூழின் குணம்.

எள்ளுதான் எண்ணெய்க்கு காயறது ,
எலி புழுக்கை எதுக்கு காயறது.

குடத்திலே ஏத்தின விளக்கு போல..

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது .

துடைப்ப கட்டைக்கு , பட்டு குஞ்சலம் கட்டினது போல.

கேட்டா கேளு , விட்டா விடு .

அடியாத மாடு பாடியது .

உயர உயர பறந்தாலும், ஊர் குருவி , பருந்தாகுமா ?

பக்கத்துக்கு வீட்டை பகைகாதே .

அழையாத வீட்டில் நுழையாதே.

கண்ணை திற என்றால் , வாயை தொறக்கரையே.

குறத்தி பிள்ளை பெத்தா,
குறவன் மருந்து முழிங்கினானாம்.

அஞ்சு ஊராம், பஞ்சாயத்து.

கிழவன் பேச்சை கின்னரக்காரன் கேட்பானா?

கிடக்கிறதெல்லாம் , கிடக்கட்டும் ,
கிழவனை தூக்கி மனைலே வைன்னாளாம்.

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,
தொன்னை நெய்க்கு ஆதாரமா?

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா?

விதை ஒன்று போட்டால்
சுரை ஒன்று முளைக்குமா?

மொட்டைத்தலைக்கும் , முழங்காலுக்கும்
முடிச்சு போடாதே .

அப்துல் காதருக்கும் , அமாவாசைக்கும் ,
என்ன சம்பந்தம் ?

தடி எடுத்தவன் , தண்டல்காரனா?

காசை கரியாக்காதே .

குரங்கு கையில் பூமாலை கொடுத்தாப்போல .

சீப்பை ஒளிச்சு வைத்தால் , கல்யாணம் நிற்குமா ?

ஊர்லே கல்யாணம், மார்லே சந்தனம்.

இல்லைங்கறவனுக்கு, ஒரு கவலையும் இல்லை .
இருப்பவனுக்கு , ஆயிரம் கவலை .

ஆண்டி பெத்தது அஞ்சும் குரங்கு.

எத்தை தின்னா பித்தம் தீரும் .

கிட்ட போனா , முட்ட பகை .

உயிரோடு உள்ள போது, ஒரு முத்தத்தைகாணோம்
சாகும்போது , ஒரு கோடி முத்தமாம் .

ஆசையிருக்கு , தாசில் பண்ண ,
அதிர்ஷ்டம் இருக்கு , மாடு மேய்க்க.

தங்க ஊசின்ன ,கண்ணுல குத்திக்க முடியுமா.

பகலில் பக்கம் பார்த்து பேசு ,
இரவில் அதுவும் பேசாதே .

அளவுக்கு மீறினால் , அமிர்தமும் நஞ்சு 

௦௦௦௦௦௦௦௦=======௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦======௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦===௦௦௦௦௦௦௦௦///////////=================================

விஜயலட்சுமி ராமசந்திரன் எழுதி கொடுத்த பழமொழிகள் .
======================================================

மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கனுமா ?

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி .

வேலியே பயிரை மேய்ந்தால் .

கூழ் குடித்த குழந்தை குந்தாணி .

அரியும் சிவனும் ஒன்னு , அறியாதவன் 
வாயிலே மண்ணு .

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் .

கிணற்று நீரை , வெள்ளம் கொண்டு போகுமா ?

பெண் புத்தி , பின் புத்தி.

பெண் என்றால் பேயும் இறங்கும்.

வாய் புளிச்சதோ , மாங்காய் புளிச்சதோ.

துணிந்தவனுக்கு தூக்குமேடை ,
பணிந்தவனுக்கு பட்டு மெத்தை.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் .

மண் குதிரையை நம்பி , ஆற்றில் இறங்காதே.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல .

வாயுள்ள பிள்ளை பொழைக்கும்.


சேது ராமன் (வந்தனா நண்பர் ) அனுப்பியது .

மதுரைக்கு வழி வாயில
 பாத்திரம் அறிந்து பிச்சை இடு
 
அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்
 
எரியிற கூறையில பிடுங்கின வரை லாபம்
 
ஆண்டிக்கு வாய்ச்சது அத்தனையும் குருடு
 
ஓட்டை வீட்டுக்கு ஓன்பது வாசல்  .

பழுத்த மரம் தான் கல்லடி படும்

பனை மரத்தடியில் இருந்து பாலை குடித்தாலும்
அதை கள் என்று தான் சொல்வர்

அமாவாசைக்கும் அப்துல் கலாமுக்கும் என்ன சம்மந்தம்

கைக்கு எட்டியது வாக்கு எட்டவில்லை

சாண் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்

ஆடின காலும் பாடின வாயும் நிற்காது

பாம்பென்றால் படையும் நடுங்கும்

இரு தலை கொள்ளி எறும்பு போல

கடை தேங்காய எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது


=========================================


இதுவரை அனுப்பிய பழ மொழிகளில் ,
சில திருத்தங்கள் .
=================================================



Corrections:

சண்டி  குதிரைக்கு சறுக்கினது சாக்கு

நாய் விற்ற காசு குறைக்காது 
மீன் விற்ற காசு நாறாது

தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரனா?

நிறைகுடம் தளும்பாது .   Also repeated.

இறைக்க ஊறும் மணற்கேணி ,
ஈய பெருகும் பெருஞ்செல்வம் .

அஞ்சிலே ளையாதது ,ஐம்பதிலே ளையுமா .

தென்னை மரத்திலே தேள் கொட்டினா பனைமரத்தில்நெறி கட்டுமா ?

கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா  ?

அழுதாலும் சிரிச்சாலும் ,அவளே
 
பெற்றாகணும்  பிள்ளையை .

நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும் .

நன்றி : சேது ராமன்.

























2 comments: